• Download mobile app
01 Nov 2025, SaturdayEdition - 3552
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக விவசாயி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி

July 24, 2017 தண்டோரா குழு

தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி சுப்ரமணியன் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த மே மாதம் விவசாயிகள் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க