• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குற்றாலத்தில் குளிக்க 4-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

July 21, 2017 தண்டோரா குழு

கோவையின் முக்கிய சுற்றுலாத்தளமான கோவை குற்றாலத்தில் குளிக்க 4-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக,அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கோவை குற்றால அருவியில் மழைநீருடன் சிறு பாறைகளும், கற்களும் வர வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடைப் போடபட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோவையின் முக்கிய நீராதாரமாக விளங்கும் சிறுவானி அணையிலும் நீர்வரத்து அதிகரித்து வருவதால், கோவையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க