• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் இடமாற்றம்

July 20, 2017 தண்டோரா குழு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் அனிதா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு சிறப்பு சலுகை அளிக்க டிஜிபி சத்திய நாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிறை துறை டிஜஜி ரூபா குற்றம் சாற்றினார்.இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்டது.

இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிறை துறை டிஜஜி ரூபா போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அந்தவகையில்,இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் அனிதா பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு அக்ரஹாரா சிறையில் இருந்து தார்வார்டு சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளர். ஏற்கனவே 2 உயர் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் அனிதாவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க