July 19, 2017
தண்டோரா குழு
இந்தித் திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்த அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் சமீபகாலமாக அரசியல் குறித்து பேசி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் பலர் கமலை விமர்சனம் செய்தனர். இதுமட்டுமின்றி கமலுக்கு அரசியல் தெரியாது என்றும் ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால் அவரது குற்றசாட்டிற்கு கருத்து தெரிவிப்பேன் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில்நேர்மையான தமிழகக் குடிமக்களுக்கும் ,என் தலைமையை ஏற்ற தொண்டர் படைக்கும் சமர்பணம்என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
“அந்த அறிக்கை இதோ”