• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

அமெரிக்காவில் விமானத்தில் இருந்து குதித்து Sky Diving வீரர் தற்கொலை

July 19, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் பாராசூட்டை பயன்படுத்தாமல் Sky Diving செய்து,ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடாவில் விதான் டோனியோ கபோடோர்டோ(27) மற்றும் அவருடைய மனைவி கோச்டான்சா லிடேலேன்னி(25) தம்பதியினர் வசித்து வருகின்றனர். கபோடோர்டோ Sky Diving செய்வதில் அனுபவம் பெற்றவர். அவர் அவருடைய மனைவியுடன் United Parachute Technologies என்னும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

ப்ளோரிடாவின் டேடோனா விமானநிலையத்தில் Sky Diving செய்யும் வசதி உண்டு.
சம்பவத்தன்று போடோர்டோ Sky Diving செய்ய அந்த விமான நிலையத்திற்கு சென்று, விமானம் ஏறியுள்ளார். அங்கிருந்து அவருடைய மனைவிக்கு காணொளி ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த காணொளியில் அதில் நான் விமானத்தில் இருந்து குதிக்கும் போது ‘நான் பாராசூட்டை திறக்க போவதில்லை வேறொரு இடத்திற்கு செல்லபோகிறேன் என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட அவருடைய மனைவி உடனே விமானநிலையதிற்கு சென்று, அவருடைய கணவர் பயணித்த விமானத்தை நிறுத்துமாறு கேட்டுள்ளார். ஆனால், அவர் வருவதற்கு முன்பாகவே விமானம் கிளம்பிவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் சொன்னது போலவே, பராஷூட்டை திறக்காமல், விமானத்திலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.அவருடைய உடல் டேலாண்ட் முனிசிபல் விமானநிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டது. அவருடைய இந்த முடிவுக்கு என்ன காரணம் என்று சரியாக தெரியவில்லை.

அவருடைய உடல் அருகிலிருந்த மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ப்ளோரிடா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க