• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிரானைட் முறைகேடு விசாரணை சகாயம் குழுவை கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

July 19, 2017 தண்டோரா குழு

கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் குழுவை கலைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் முறைகேடாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.இக்குழு விசாரணை நடத்தி முறைகேடு தொடர்பாக முழு அறிக்கையும் தாக்கல் செய்தது.

மேலும்,விசாரணை தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை, என்று சகாயம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது சகாயம் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவை வரும் 31 ஆம் தேதிக்குள் கலைக்க வேண்டும் என்றும், இந்த குழுவிற்கு வழங்கப்பட்ட கணினி உள்ளிட்ட உபகரணங்களையும் அரசிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க