• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முகமது ஷமியை தாக்கிய 3 பேர் கைது

July 18, 2017 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை தாக்கியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. இவர் இம்மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளார். இவர் தெற்கு கொல்கத்தாவில் உள்ள கட்ஜூ நகரில் வசித்துவருகிறார்.

இந்நிலையில் ஷமி கடந்த சனிக்கிழமை வெளியில் சென்றுவிட்டுமனைவியுடன் காரில் வீட்டுக்குத் திரும்பிவீட்டின் முன்புறம் காரை நிறுத்தி கொண்டிருந்தார். இதற்கடையில் அவ்வழியாக பைக்கில் வந்த மூன்று நபர்கள் பாதையை அடைத்து வைத்துள்ளதாக கூறி வீட்டின் பாராமரிப்பளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஷமி ஈடுபட்டார். சமாதான முயற்சி பலனளிக்காத்தால் திடீரென கைகலப்பு ஏற்பட்டது. அப்போது பைக்கில் வந்தவர்கள் ஷமியை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ஷமி போலீசில் புகார் அளித்தார். அங்குகிருந்த சிசிடிவி உதவியுடன் விசாரணை நடத்திய போலீசார் ஜெயந்த சர்கார், ஸ்வரூப் சர்கார், ஷிவா ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் படிக்க