• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகா் திலீப் ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

July 18, 2017 தண்டோரா குழு

மலையாள நடிகா் திலீப்பின் ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கேரள உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரபல மலையாள நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நடிகர் திலீப் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், ஜாமீன் வழங்க மறுத்ததோடு, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினர்.

இதனை தொடா்ந்து நடிகர் திலீப் சார்பில் திருவனந்தபுரம் உயா்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உடனடி வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நடிகர் திலீப் சார்பில் உயா்நீதிமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்த உயா்நீதிமன்றம் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும், மேலும் இந்த மனு மீதான விசாரணை வருகிற 20ம் தேதி நடைபெறும் என்று ஒத்திவைத்துள்ளது.

மேலும் படிக்க