• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் கட்டடத்தின் மேல் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த டிராபிக் ராமசாமி

July 15, 2017 தண்டோரா குழு

கதிராமங்கலம் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி டிராபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

சென்னை பாரிமுனையில் உள்ள தனது அலுவலகத்தின் 4 வது மாடியின் உச்சியில் படுத்துக்கொண்ட சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுவிக்க வேண்டும். விவசாயிகள் பிரச்னையை உடனடியாகத் தீர்க்க வேண்டும், தமிழகத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.இல்லை என்றால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.பின்னர் பல்வேறு முயற்சிக்கு பின்னர் போலீசார் அவரை சமாதானப்படுத்தி கீழே இறக்கினர்.

மேலும் படிக்க