• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக சோம்பேறிகளின் பட்டியலில் இந்தியா 39வது இடம்

July 14, 2017 தண்டோரா குழு

உலகின் சோம்பேறி நாடுகள் பட்டியலில் இந்திய 39வது இடத்தை பெற்றுள்ளது.

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்,அதிக சோம்பேறிகள் உள்ள நாடுகள் எத்தனை பேர் என்று 46 நாடுகளைச் சேர்ந்த சுமார் 700,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வை ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்ட ஸ்டெப் கவுண்ட் மூலம் கணக்கிடப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் நமது இந்திய நாடு 39வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியர்கள் ஒரு நாளைக்கு 4,297 அடிகள் மட்டுமே நடக்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவலை தந்துள்ளது.

மேலும் சீனா நாட்டை சேர்ந்த மக்கள் சோம்பேறி தனத்தில் மிகவும் குறைந்தவர்கள் என்றும் ஜப்பானின் ஹாங்காங் நாட்டு மக்கள் ஒரு நாளைக்கு 6,880 அடிகள் நடக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

இந்தோனேசியா நாட்டின் மக்கள் ஒரு நாளைக்கு 3513 அடிகள் நடக்கிறார்கள். அமெரிக்க மக்கள் 4,774 அடிகள் நடக்கிறார்கள். மேலும் 6௦௦௦ அடிகளுக்கு மேலாக நடக்கும் மக்கள் பட்டியலில் சீனா, ஹாங்காங்,உக்ரைன் மற்றும் ஜப்பான் இடம்பெற்றுள்ளது. 3,9௦௦க்கு அடிக்கு குறைவாக நடக்கும் மக்கள் பட்டியில் மலேசியா, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க