• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசி விவகாரம் விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவு

July 13, 2017 தண்டோரா குழு

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து உயர் மட்டக்குழு விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார்.

அப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதாகவும்,அதற்காக முன்னாள் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டினார்.இதனை டிஜிபி டிஜிபி சத்தியநாராயணா மறுத்துள்ளார்.

இந்நிலையில், இப்புகார் குறித்து உயர் மட்டக்குழு விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க