• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏடிஎம் மெஷினுக்கு இன்று 50வது பிறந்தநாள் !

June 27, 2017 தண்டோரா குழு

வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுப்பதை குறைக்கும் விதத்தில் அமைக்கபட்டது தான் ஏடிஎம் என்ற தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்.

பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஷெப்பர்டு பாரோன் என்பவர் தான் ஏ.டி.எம்., இயந்திரத்தை கண்டுபிடித்தார்.

உலகளவில், ஏ.டி.எம்., இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்து விட்டன. உலகின் முதல் ஏ.டி.எம்.,இயந்திரம், வடக்கு லண்டனில், என்பீல்டு என்ற இடத்தில் உள்ள பர்கிலேஸ் வங்கி கிளையில், 1967 ம் ஆண்டு ஜூன், 27 ம் தேதி அமைக்கப்பட்டது.

இன்று உலக அளவில் ஏ.டி.எம்., இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளன. எனினும், முதன் முதலில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம்எடுத்தவர் ‘டிவி’ நடிகர் ரெக் வார்னே தான். இந்த இயந்திரம் பொருத்தப்பட்டு, 50 ஆண்டுகள் ஆகி விட்டன.

இதையடுத்து, 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி, லண்டன் பர்கிலேஸ் வங்கி கிளையில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்திற்கு தங்க தகடு பொருத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த இயந்திரத்திற்கு முன்பு, சிவப்பு கம்பளமும் விரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க