• Download mobile app
29 Oct 2025, WednesdayEdition - 3549
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீரா குமார் நாளை வேட்புமனு தாக்கல்

June 27, 2017 தண்டோரா குழு

எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் மீரா குமார், நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

இது தொடர்பாக தில்லியில் அவர் அளித்த பேட்டியில்,

“எதிர்க்கட்சிகள் என்னை ஒருமனாக தேர்வு செய்துள்ளதற்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
ஜனநாயக மதிப்புகள், வெளிப்படைத் தன்மை, வறுமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு உள்ளிட்ட அரசியல் கோட்பாடுகளை முன் வைத்தே தேர்தலை சந்திக்கிறோம்.இரண்டு தலித் வேட்பாளர்களுக்கு இடையே ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதாக பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் பொதுவான கொள்கை அடிப்படையில் ஒன்று சேர்ந்துள்ளன. அனைத்து கட்சிகளும் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

நான் லோக்சபா சபாநாயகராக இருந்த போது, எனது பணியை அனைவரும் பாராட்டியுள்ளனர். ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாக யாரும் புகார் கூறவில்லை.ஜனாதிபதி தேர்தலை தலித்களுக்கு இடையிலான மோதலாக மாற்ற வேண்டாம்.

மேலும் குஜராத் மாநிலத்தின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து எனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளேன்”. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க