• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வருங்கால முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – எஸ்.வி.சேகர்

June 22, 2017 தண்டோரா குழு

வருங்கால முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று நடிகர் விஜய்க்கு பா.ஜ.க வைச் சேர்ந்தவரும் நடிகருமான எஸ்.வி. சேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய், இன்று தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது 61-வது படத்தின் பெயர் மற்றும் பரஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதில், விஜய்யின் பெயரை ‘தளபதி விஜய்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இளைய தளபதி விஜய்யிலிருந்து’ ‘தளபதி விஜய்க்கு’ மாற, இதை விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கான அறிகுறியாகவே அவரது தொண்டர்கள் பார்க்கின்றனர். சமிபத்தில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சயில் விவசாயிகளுக்கு ஆதரவாக விஜய் பேசினார்.

இந்நிலையில், பா.ஜ.கவைச் சேர்ந்தவரும்,நடிகருமான எஸ்.வி. சேகர் வருங்கால முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில்,

விஜய் தனது கடின உழைப்பால் படிப்படியாக முன்னுக்கு வந்தவர். விஜய்க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், ஆசிர்வாதங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களுடைய கஷ்டங்களை தெரிந்தவர் தான் அரசியலுக்கு வர வேண்டும். அந்த வகையில் மக்களின் கஷ்டங்களை அறிந்தவர் விஜய் தான்.எனவே விஜய் அரசியலுக்கு வர வேண்டிய சூழல் உள்ளது.

மேலும் படிக்க