• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

வருங்கால முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – எஸ்.வி.சேகர்

June 22, 2017 தண்டோரா குழு

வருங்கால முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று நடிகர் விஜய்க்கு பா.ஜ.க வைச் சேர்ந்தவரும் நடிகருமான எஸ்.வி. சேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய், இன்று தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது 61-வது படத்தின் பெயர் மற்றும் பரஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதில், விஜய்யின் பெயரை ‘தளபதி விஜய்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இளைய தளபதி விஜய்யிலிருந்து’ ‘தளபதி விஜய்க்கு’ மாற, இதை விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கான அறிகுறியாகவே அவரது தொண்டர்கள் பார்க்கின்றனர். சமிபத்தில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சயில் விவசாயிகளுக்கு ஆதரவாக விஜய் பேசினார்.

இந்நிலையில், பா.ஜ.கவைச் சேர்ந்தவரும்,நடிகருமான எஸ்.வி. சேகர் வருங்கால முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில்,

விஜய் தனது கடின உழைப்பால் படிப்படியாக முன்னுக்கு வந்தவர். விஜய்க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், ஆசிர்வாதங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களுடைய கஷ்டங்களை தெரிந்தவர் தான் அரசியலுக்கு வர வேண்டும். அந்த வகையில் மக்களின் கஷ்டங்களை அறிந்தவர் விஜய் தான்.எனவே விஜய் அரசியலுக்கு வர வேண்டிய சூழல் உள்ளது.

மேலும் படிக்க