• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிகிச்சை பெற்று காட்டுக்குள் சென்ற பெண் யானை உயிரிழந்தது

June 22, 2017 தண்டோரா குழு

சிறுமுகை வனப்பகுதியில் சிகிச்சை பெற்று காட்டுக்குள் சென்ற வயதான பெண் யானை மீண்டும் ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தது.

மேட்டுப்பாளையம் அருகே பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியில் செவ்வாய்க்கிழமை தண்ணீர் அருந்த வந்த யானை கூட்டத்தில் இருந்து வயதான பெண் யானை உடல் சோர்வால் மயங்கி விழுந்தது.

அதன் பின் சிறுமுகை வனத்துறையினர் மற்றும் வனத்துறை கால்நடை மருத்துவர்களின் சிகிச்சையால் புதன்கிழமை அதிகாலை மீண்டும் எழுந்து காட்டுக்குள் சென்றது.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் ஆற்றில் தண்ணீர் அறுந்த வந்த அந்த பெண் யானை ஆற்றில் ஓரம் மயங்கி விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானைக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க திட்டமிட்டனர். ஆனால் யானை சிகிச்சை தொடங்கும் முன்பே இறந்துவிட்டது.

மேலும் படிக்க