• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

சிகிச்சை பெற்று காட்டுக்குள் சென்ற பெண் யானை உயிரிழந்தது

June 22, 2017 தண்டோரா குழு

சிறுமுகை வனப்பகுதியில் சிகிச்சை பெற்று காட்டுக்குள் சென்ற வயதான பெண் யானை மீண்டும் ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தது.

மேட்டுப்பாளையம் அருகே பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியில் செவ்வாய்க்கிழமை தண்ணீர் அருந்த வந்த யானை கூட்டத்தில் இருந்து வயதான பெண் யானை உடல் சோர்வால் மயங்கி விழுந்தது.

அதன் பின் சிறுமுகை வனத்துறையினர் மற்றும் வனத்துறை கால்நடை மருத்துவர்களின் சிகிச்சையால் புதன்கிழமை அதிகாலை மீண்டும் எழுந்து காட்டுக்குள் சென்றது.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் ஆற்றில் தண்ணீர் அறுந்த வந்த அந்த பெண் யானை ஆற்றில் ஓரம் மயங்கி விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானைக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க திட்டமிட்டனர். ஆனால் யானை சிகிச்சை தொடங்கும் முன்பே இறந்துவிட்டது.

மேலும் படிக்க