• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஃபேஸ்புக் லைக்ஸுக்காக குழந்தையை மாடியில் தொங்கவிட்ட தந்தை!

June 21, 2017 தண்டோரா குழு

சமூக வலைத்தளமாக பேஸ்புக்கில் விதவிதமாக புகைப்படங்கள் எடுத்து அதை நண்பர்களுடன் பகிர்ந்து அதிக லைக்ஸ் வாங்குவது என்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது. அதிக லைக்ஸ்காக பலர் ஆபத்தையும் உணராமல் புகைப்படங்களை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் ஃபேஸ்புக்கில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காக, ஒருவர் தனது குழந்தையை உயரமான மாடியிலிருந்து வெளியே நீட்டி, விபரீதச் செயலைச் செய்திருக்கிறார்.

அல்ஜீரியாவை சேர்ந்த ஒருவர்ஃபேஸ்புக்கில் 1,000 லைக்குகள் வாங்க வேண்டும் என்பதற்காக, 15-வது மாடியின் ஜன்னலிலிருந்து தன் குழந்தையின் சட்டையைப் பிடித்து அந்தரத்தில் தொங்கவிட்டிருக்கிறார். குழந்தை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போது அதை புகைப்படம் எடுத்து, ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

இதுமட்டுமின்றி ‘எனக்கு 1,000 லைக்குகள் வேண்டும்; இல்லையென்றால் குழந்தையை விட்டுவிடுவேன்’ என்ற வாசகத்தையும் பதிவுசெய்திருக்கிறார்.

ஃபேஸ்புக்கில் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் குழந்தையை மீட்கக் கோரியும், குழந்தையின் தந்தையைக் கைது செய்யகோரியும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், குழந்தையை பத்திரமாக மீட்டனர். மேலும் குழந்தையின் பாதுகாப்புக்கு பாதிப்பு உண்டாக்கியதாகக் குற்றச்சாட்டிற்காக
குழந்தையின் தந்தையைக் கைது செய்தனர்.

மேலும் படிக்க