• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆம்புலன்ஸ் வருகையால் ஜனாதிபதி காரை நிறுத்திய ட்ராபிக் போலீஸ் குவியும் பாராட்டுக்கள்!

June 20, 2017 தண்டோரா குழு

பெங்களூருவில், ஆம்புலன்ஸ் செல்வதற்காக குடியரசுத் தலைவரின் காரையே தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

கடந்த சனிக்கிழமை(ஜூன் 17)பெங்களூரில் மெட்ரோ சேவையை தொடங்கி வைப்பதற்காக இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ராஜ்பவன் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஜனாதிபதி செல்லும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் மிக்க டிரினிட்டி சர்க்கிள் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் சப் இன்ஸ்பெக்டர் நிஜலிங்கப்பா நிறுத்தப்பட்டிருந்தார்.

அப்போது,அந்த வழியாக தனியார் மருத்துவமனை நோக்கி நோயாளியுடன் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது. இதனை கவனித்த நிஜலிங்கப்பா ஜானதிபதி கார் வருவதையும் பொருட்படுத்தாமல் அங்கு வந்து கொண்டிருத்த அனைத்து வானங்களையும் நிறுத்திவிட்டு ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தார்.

மேலும், பெங்களூரு கிழக்குப்பகுதி போக்குவரத்து ஆணையர் அபிசேகோயால் என்பவர் தன்னுடைய சமூக வலைத்தளபக்கத்தில் நிஜலிங்கப்பாவிற்கு பாராட்டு தெரிவித்ததோடு அவருக்கு சன்மானமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி காரையே நிறுத்தி ஒரு உயிரை காப்பாற்றி ஒரே நாளில் நிஜலிங்கப்பா அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, அவருக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் படிக்க