• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியா- பாக். போட்டியில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு பெட்டிங் !

June 17, 2017 தண்டோரா குழு

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெறும் சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் சுமார் 2000 கோடி வரை சூதாட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நாளை நடைபெறும் இறுதிபோட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதுமட்டுமின்றி சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிபோட்டியில் மோதவுள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தில் சூதாட்டத்திற்கு அனுமதி உள்ளதால், இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது மொத்தம் 2,000 கோடி ரூபாய் வரை சூதாட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக அனைத்து இந்திய கேமிங் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பெரும்பாலானோர் இந்திய அணிக்கு சாதகமாக பெட் கட்டுவார்கள் என்பாதால் இந்திய அணி மீது பெட் கட்டுவோருக்கு குறைந்த அளவிலேயே பரிசு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்திய அணிக்கு 100 ரூபாய் பெட் கட்டினால் 147 ரூபாய் கிடைக்குமாம். அதே பாகிஸ்தான் அணிக்கு 100 ரூபாய் கட்டினால் 300ரூபாய் கிடைக்குமாம்.

மேலும் படிக்க