• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பவானி ஆற்றின் நீர் மாதிரிகள் சோதனை சேலம் அனுப்பபடும் என அதிகாரிகள் தகவல்

June 14, 2017 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் நீர் மாதிரிகள் சேலத்தில் உள்ள ஆய்வு மையத்திற்கு எடுத்து செல்லபட்டு நீரில் கலந்துள்ள மாசு குறித்து கண்டறியப்படும் என மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தகவல்.

பவானி ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் விவகாரம் குறித்து மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானி ஆற்றில் கடந்த திங்கட்கிழமை ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பது கண்டறியபட்டது. பவானி கரையோரம் இயங்கும் துணிகளுக்கு சாயம் ஏற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் இராசயன கழிவு நீர் நேரடியாக எவ்வித சுத்திகரிப்பும் இன்றி ஆற்றில் கலக்கவிபடப்படுவதால் ஆற்று நீர் மாசடைந்து அதில் உள்ள மீன்கள் இறந்துபோனதாக புகார் எழுந்தது.

இங்குள்ள ஆற்று நீரையே குடிநீராக வினியோகம் செய்யபட்டு வருவதால் அச்சமடைந்த மக்கள் பவானி ஆற்று நீர் இரசாயன கலப்பால் விஷமாக வருவதாக தெரிவித்து இது குறித்து மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனை அடுத்து புதன்கிழமை காலை கோவையில் இருந்து மாவட்ட மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரி மலையாண்டி தலைமையில் மேட்டுப்பாளையம் வந்திருந்த அதிகாரிகள் குழுவினர் இங்குள்ள பவானி ஆற்றில் மீன்கள் இறந்து கிடந்த கரையோர பகுதியை ஆய்வு செய்ததுடன் நீரில் கலந்துள்ள ஆக்ஸிசன் மற்றும் உப்பின் அளவு குறித்து சோதனை செய்தனர்.

பின்னர் அங்குள்ள ஆற்று நீரின் மாதிரியை மேல் பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். இது குறித்து மாசுகட்டுபாட்டு அதிகாரிகள் கூறுகையில்

“குடிநீராக பயன்படுத்தப்படும் பவானி ஆற்று நீர் மாசடைந்துள்ளதா, இரசாயன கழிவுகள் கலப்பால் பாதிக்கபட்டுள்ளதா, மீன்கள் இறந்ததற்காக காரணம் மற்றும் கரையோர பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலை கழிவுகள் முறையாக சுத்திகரிக்கப்படுகிறதா என பல வகைகளிலும் விசாரணை நடத்தப்படும்.

தற்போது எடுக்கபட்டுள்ள மாதிரிகள் சேலத்தில் உள்ள ஆய்வு மையத்திற்கு எடுத்து செல்லபட்டு நீரில் கலந்துள்ள மாசுக் குறித்து கண்டறியப்படும் இதன் பின்னர் ஆய்வக அறிக்கையின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றனர்.

மேலும் படிக்க