• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாவட்டந்தோறும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்கக்கோரி மத்திய அமைச்சரை சந்தித்த நடிகை வரலட்சுமி

June 13, 2017 தண்டோரா குழு

டெல்லியில் மத்திய சட்டத்துறை இணையமைச்சர் பி.பி.சௌத்ரியுடன், நடிகை வரலட்சுமி இன்று சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

நடிகை வரலட்சுமி பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக நடிகை வரலட்சுமி ஒரு அமைப்பை தொடங்கியுள்ளார். இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் மகிளா நீதிமன்றங்கள் அதிகளவில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து பேசினார்.

இந்நிலையில், இன்று நடிகை வரலட்சுமி டெல்லியில் மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்ரியை சந்தித்து மாவட்டந்தோறும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்கக்கோரியும் பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க கூடுதலாக நீதிபதிகளை நியமிக்கவும் அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளார்.

அப்போது மகளிர் நீதிமன்றம் அமைப்பது குறித்து பிற மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுத உள்ளதாக இணையமைச்சர் சௌத்ரி உறுதியளித்துள்ளார்.

மேலும் படிக்க