• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பசுவை கொன்றால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை – உபி டிஜிபி உத்தரவு

June 6, 2017 தண்டோரா குழு

பசுக்களை கொல்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென உத்தரபிரதேச காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

எனினும், பாஜக ஆளும் மாநிலங்கள் மத்திய அரசின் உத்தரவை பின்பற்றத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், லக்னோவில் நடைபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய உபி டிஜிபி சுல்கான் சிங்,

பசுக்களை கடத்துவோர் மற்றும் அவற்றை கொல்பவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் மூன்று அல்லது அதற்கு மேல் ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்திரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பியில் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க