• Download mobile app
17 Jul 2026, FridayEdition - 3810
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பசுவை கொன்றால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை – உபி டிஜிபி உத்தரவு

June 6, 2017 தண்டோரா குழு

பசுக்களை கொல்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென உத்தரபிரதேச காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

எனினும், பாஜக ஆளும் மாநிலங்கள் மத்திய அரசின் உத்தரவை பின்பற்றத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், லக்னோவில் நடைபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய உபி டிஜிபி சுல்கான் சிங்,

பசுக்களை கடத்துவோர் மற்றும் அவற்றை கொல்பவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் மூன்று அல்லது அதற்கு மேல் ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்திரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பியில் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க