• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

செல்போன் வெடித்து சிதறியதில் இளைஞர் படுகாயம் !

June 3, 2017 தண்டோரா குழு

திருவாரூரில் செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் போது போன் வெடித்துச் சிதறியதில் சச்சின் என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.

அரியலூர் மாவட்டத்தை சார்ந்தவர் சச்சின். இவர் திருவாரூர் அருகே உள்ள தனது உறவினர் குணசேகரன் என்பவரின் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருவாரூர் அருகே முகந்தனூர் என்ற இடத்தில் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, தனது உயர்ரக (ஆப்பிள்)செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, தீடிரென செல்போன் வெடித்துச் சிதறியது. இதில் அவருக்கு முகம், தாடை,கன்னம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுக் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க