திருவாரூரில் செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் போது போன் வெடித்துச் சிதறியதில் சச்சின் என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.
அரியலூர் மாவட்டத்தை சார்ந்தவர் சச்சின். இவர் திருவாரூர் அருகே உள்ள தனது உறவினர் குணசேகரன் என்பவரின் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருவாரூர் அருகே முகந்தனூர் என்ற இடத்தில் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, தனது உயர்ரக (ஆப்பிள்)செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, தீடிரென செல்போன் வெடித்துச் சிதறியது. இதில் அவருக்கு முகம், தாடை,கன்னம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுக் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு