மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மாடுகளை சந்தைகளில் விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கேரளா மற்றும் பாண்டிசேரி அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், இதுவரை தமிழக அரசு எந்தவித நிலைப்பாடும் எடுக்காமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்த கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
மாட்டிறைச்சி விவகாரத்தில் நடப்பவற்றை தமிழக அரசு உற்று கவனித்து வருகிறது. ஆகையால் உரிய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், மத்திய அரசு இணக்கமாக இருப்பதால் தான் திட்டங்களை பெற முடியம். இதனால் பினாமி அரசு என்று எங்களை விமர்ச்சிகலாமா? நான் மீண்டும் கூறுகிறேன் மாட்டிறைச்சி விவகாரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்