• Download mobile app
27 Jul 2026, MondayEdition - 3820
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சார்.

May 6, 2016 தண்டோரா குழு

தலைக் கவசம் அணியாமல் கார் ஓடிய ஒருவருக்கு அபராதம் விதித்தார் போக்குவரத்து காவல் அதிகாரி.

இந்த வேடிக்கையான சம்பவம் கோவா மாநிலத்தில் நடந்தது. கிழக்கு கோவாவில் உள்ள கடலோர பகுதியான கோல்வா என்னும் இடத்தில் காவல் துணை ஆய்வாளராகப் பணிபுரியும் எஸ்.எல். ஹுனஷிகட்டி.

இவர் அப்பகுதியில் பணியில் இருந்தபோது, ஏக்நாத் ஆனந்த் பல்கர் என்பவர் காரில் சென்றுள்ளார். அப்போது அவரைச் சோதனை செய்த துணை ஆய்வாளர் தலை கவசம் அணியாமல் சென்றதாக பல்கருக்கு அபராதம் விதித்தார். இது பின்னர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

மோட்டார் வாகன சட்டம் 177 கீழ் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது தலை கவசம் அணியாமல் சென்றால் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டும். இதன் அடிப்படையில் தான் திரு பல்கர் அபராதம் செலுத்த வேண்டி உள்ளது.

இது குறித்து உயரதிகாரிகள் கூறும்போது, வேறு சில குற்றங்களையும் இந்தப் பிரிவின் கீழ் கொண்டுவர முடியும். இதனால் தான் சிறிய பிழை ஏற்பட்டு இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். மேலும், மோட்டார் வாகன சட்டம் 177 கீழ் சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பயணிப்பவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

சரியான ஓட்டுநர் உரிமம் என்று சொல்வதற்கு பதில் தலை கவசம் என்று சொல்லி விட்டார் ஹுனஷிகட்டி. எந்த ஒரு போக்குவரத்து காவல் அதிகாரியும் காரில் செல்பவர்கள் தலைக் கவசம் அணியவில்லை என்று அபராதம் விதிக்கும் அளவிற்கு முட்டாள்கள் இல்லை என்றும் அந்த உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க