• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாம்புக்கு முத்தம் கொடுத்த இளைஞர்

May 27, 2017 தண்டோரா குழு

மகாராஷ்டிராவில் பாம்புக்கு முத்தம் கொடுத்த இளைஞர். பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் பன்வேல் நகரை சேர்ந்தவர் அஜய் பவார். பாம்பு ஒன்றை மீட்டு அதற்கு முத்தம் கொடுக்க முயன்றபோது, அது அவருடைய உதட்டில் கடித்துவிட்டது. அதன் பின் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் அவர் உயிர் பிழைத்தார்.

அவரை வனத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை(மே 25) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தினர். இதை விசாரித்த நீதிபதி அஜய்யை 5 நாள் காவலில் வைத்திருக்க உத்தரவிட்டார்.

அஜய் மீது, தானே நகரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று புகார் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தானே நகர் வனத்துறை அதிகாரி சுனில் லிமாயே கூறுகையில், “சட்டத்தைத் மீறுவோர் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும்” என்று கூறினார்.

மேலும் படிக்க