• Download mobile app
16 Jan 2026, FridayEdition - 3628
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தயாநிதி மாறன், கலாநிதி மாறனுக்கு நீதிமன்றம்நோட்டீஸ் !

May 22, 2017 தண்டோரா குழு

தயாநிதி மாறன், கலாநிதி மாறன் விடுதலையை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில், அவர்கள் சி.பி.ஜ.-க்கு விளக்கம் அளிக்ககோரி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சன் குழுமத்தை சார்ந்த கலாநிதி மாறன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இருவரையும் விடுவித்தது தீர்ப்பளித்தது.

இதனிடையே சிறப்பு நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து, சி.பி.ஐ.தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி வரும் ஆகஸ்டு 29- ம் தேதிக்குள் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோர் சி.பி.ஐ.க்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் படிக்க