• Download mobile app
16 Jan 2026, FridayEdition - 3628
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு – அமைச்சர் செங்கோட்டையன்

May 22, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்க திட்டமிட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இந்த ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் பள்ளிகளில் மாற்று சான்றிதழ் முறைக்கு தேவை இருக்காது என்றும், இந்த ஸ்மார்ட் கார்டில் மாணவர்களின் புகைப்படம், ரத்த வகை, முகவரி, குடும்ப விவரம், ஆதார் விவரம் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் இந்த ஸ்மார்ட் கார்டு கல்வித்துறையில் டிஜிட்டல் வளர்ச்சிக்கான நகர்வு எனவும், ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம், என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க