• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் ஆலோசகர் பவன் ரெய்னா ராஜிநாமா

May 19, 2017 தண்டோரா குழு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தமிழக அரசின் டெல்லி ஆலோசகராக நியமிக்கப்பட்ட பவன் ரெய்னா பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவருக்கு டெல்லியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தில் அலுவலகம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெறுவது தொடர்பாக, லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் இவரது பெயரும் அடிபட்டது. இதனையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்றும்,ராஜினாமா கடிதத்தை சென்னைக்கு அனுப்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரால் நியமிக்கப்பட்ட பல ஆலோசகர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க