• Download mobile app
16 Apr 2026, ThursdayEdition - 3718
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்னை தமிழனா என சமூக வளைத்தளங்களில் விமர்சிப்பது வருத்தமளிக்கிறது – ரஜினி

May 19, 2017 தண்டோரா குழு

ரஜினி தமிழனா என சமூக வளைத்தளங்களில் விமர்சிப்பது வருத்தமளிக்கிறது என ரஜினி கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ரசிகர்களை சந்தித்து மாவட்ட வாரியாக அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். கடைசி நாளான இன்று ரசிகர்களை சந்தித்த ரஜினி பரபரப்பாக பேசினார்.

அப்போது பேசிய அவர்,

எனக்கு 67 வயதாகிறது, 23 ஆண்டு தான் கர்நாடகாவில் இருந்தேன் எஞ்சிய 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் உங்கள் கூடவே வளர்ந்தேன். கர்நாடகத்தில் இருந்து மாராட்டியராக வந்திருந்தாலும் பேரும் புகழும் அள்ளிக்கொடுத்து என்னை தமிழனாக்கி விட்டீர்கள், அதனால் நான் பச்சைத் தமிழன்”

என்னை எங்கேயாவது போ என்று வெளியே தூக்கிப் போட்டால் இமயமலையில் தான் வீழ்வேனே தவிர வேறு மாநிலத்திற்கு போக மாட்டேன். ஆனால் ரஜினிகாந்த் தான் தமிழனா என்று சமூக வலைதளங்கள் மற்றும் டுவிட்டரில் வெளியாகும் தரமற்ற விமர்சனங்கள் வருத்தமளிக்கிறது.

திருமாவளவன், சீமான், அன்புமணி, ஸ்டாலின் போன்ற நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள்.ஜனநாயகமே கெட்டுப்போய் உள்ளது. மக்களின் சிந்தனையை மாற்றினால் மட்டுமே நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அனைவருக்கும் வேலை உள்ளது ஊருக்கு போய் வேலையை பாருங்கள் போர் வரும் போது பார்த்துக் கொள்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க