• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காதலனை துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற காதலி

May 17, 2017 தண்டோரா குழு

உ.பி,யில் தன்னை காதலித்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த வாலிபரை இளம்பெண் துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டம் மவுதாஹா நகரை சேர்ந்தவர் அசோக் யாதவ். இவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அங்கு பணிபுரியும் இளம்பெண்ணுக்கும் அசோக்கிற்கும் இடையே நீண்ட நாளாக காதல் இருந்துள்ளது.ஆனால், திடீரென அசோக் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருக்கிறார். அதிலிருந்து தனது காதலியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில்,நேற்று முன்தினம் அசோக்கிற்கு திருமண சடங்குகள் நடந்து வந்துள்ளது. அப்போது துப்பாக்கியுடன் அங்கு வந்த அசோக்கின் காதலி தன்னை காதலித்து விட்டு மற்றொரு பெண்ணை எப்படி திருமணம் செய்யலாம் என கல்யாணத்தை நிறுத்தினார். மேலும்,துப்பாக்கி முனையில் அசோக்கை சட்டை காலரை பிடித்து இழுத்து காரில் கடத்தி சென்றுள்ளார். இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசாரின் விசாரணையில்,

இருவரும் சேர்ந்து திட்டமிட்டே இந்த நாடகத்தை நடத்தியிருப்பார்கள். இல்லையென்றால், அசோக் எப்படி எதிர்ப்பே தெரிவிக்காமல் உடன் சென்றிருப்பார்?” என்று சந்தேகம் தெரவித்துள்ளனர். மேலும், ஏராளமான மக்கள் இருக்கும் போது எவ்வாறு பெண் ஒருவர் கடத்தி செல்ல முடியும். யாரும் அவரை தடுக்க முயற்சி செய்யவில்லையா? அசோக், தானாகவே, அந்த பெண்ணுடன் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க