• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

விபத்தின் போது உதவிய ‘சிறி’(SIRI) செயலி

May 16, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் வீட்டில் ஏற்பட்ட விபத்தின் போது, தன்னுடைய உயிரை காப்பாற்றிய ‘சிறி’(SIRI) என்னும் மொபைல் செயலிக்கு நன்றி தெரவித்துள்ளார்.

அமெரிக்க நாட்டின் நியூ ஹாம்ஸ்ஹையரைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் பௌச்சர். இவர் விச்கோசின் மாநிலத்தின் வில்மாட் நகரிலுள்ள அவருடைய தாயார் வசித்த வீட்டிற்க்கு சென்றுள்ளார்.

வீட்டிற்கு உள்ளே சென்ற அவர், சுவிட்சை போட்டவுடன், வீடு தீப்பற்றியது. அந்த விபத்தில் கிறிஸ்டோபரின் முகமும் கைகளும் மோசமாக எரிந்துவிட்டது. அவருடைய கைபேசியை அவர் தனது கைகளால் பயன்படுத்தி அவசர உதவிக்கு அழைப்பு விடுக்க முடியவில்லை. அதன் பிறகு ஐபோன் “சிறி(SIRI)” செயலியை பயன்படுத்தி அவசர உதவி எண் 911க்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் பெற்ற மீட்புப்பணி அதிகரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த கிறிஸ்டோபரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

தன்னுடைய சிகிச்சைக்கு பிறகு, சமையல் பணியை தொடரவும், தனது பண்ணையை கவனித்துக்கொள்ள போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆபத்து காலத்தில் உதவிய சிறி செயலிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க