• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விற்பனைக்கு வரவுள்ள ராட்சத விமானம்

May 3, 2017 தண்டோரா குழு

சீனாவின் தென் பகுதியில் உள்ள ஷுஹாய் என்னும் நகரத்தில் நிலத்திலும் தண்ணீரிலும் பயணம் செய்ய கூடிய மிக பெரிய விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தின் முதல் சோதனையாக பறக்கும் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த சோதனை செவ்வாய்க்கிழமை(மே 2) நடந்துள்ளது. இதனுடைய மற்ற சோதனைகள் இன்னும் சில நாட்களுக்குள் நடத்தப்படும் என்று சீன விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இந்த விமானம் AG 600 ரக வகை ஆகும். 37 மீட்டர் நீளமும், 38.8 மீட்டர் நீளமுடைய இறக்கையும், 53.5 டன் எடையும் கொண்டது இந்த விமானம். 2௦ வினாடிகளில் 12 டன் தண்ணீரை ஏற்றக்கூடிய வகையில் வேகமும், 37௦ டன் தண்ணீரை நிரப்பும் தொட்டியும் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடல் வழி மீட்பு, காட்டு தீ அணைக்க, கடல் சூழல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிக்கு இந்த விமானம் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மே மாதம் இறுதியில் இந்த ராட்சத விமானம் விற்பனைக்கு வரவுள்ளது. இதுவரை 17 விமானங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க