• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனா வரை சென்ற அமைச்சரின் தெர்மாகோல் திட்டம்

April 29, 2017 தண்டோரா குழு

சீன நாட்டின் நாளிதழில் தமிழக அமைச்சர் வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாகோல் வாய்த்த செய்தியை படத்துடன் வெளியிட்டுள்ளது.

வைகை ஆற்றில் நீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் 10 லட்சம் ரூபாய் செலவில் தர்மாகோல் கொண்டு மூடப்பட்டது. ஆனால் அதை மூடிய சில நிமிடத்தில் தர்மாகோல் எல்லாம் பறந்தன. இத்திட்டத்தை, வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் எனசமூக வலைத்தளங்ககளில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ராதா ரவியும் தெர்மாகோல் திட்டத்தை கிண்டலடித்து பேசினர்.

இத்திட்டம் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் பரவலாக பேசபட்டு வருகிறது.

இந்நிலையில், சீன நாட்டின் நாளிதழில் தமிழக அமைச்சர் வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாகோல் வாய்த்த செய்தியை படத்துடன் வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் “ மானம் கப்பல்ல ஏறிடுச்சுனு கேள்வி பட்டுருப்போம் இப்ப விமானமே ஏறி சீனாவுக்கெல்லாம்போயிட்டிருக்கு “ என்று கலாய்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க