• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டமன்ற தலைமையை விட தொண்டர்களின் மனநிலைதான் முக்கியம் – செம்மலை

April 28, 2017 தண்டோரா குழு

சட்டமன்ற தலைமையை விட தொண்டர்களின் மனநிலைதான் முக்கியம் என ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த செம்மலை தெரிவித்துள்ளார்.சேலத்தில் அதிமுக தொண்டர்களை சந்தித்து பேசினார் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் செம்மலை.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைய வேண்டாம் என்பது தொண்டர்களின் கருத்து தொண்டர்களின் கருத்தை தலைவர் ஓபிஎஸ்சிடம் தெரிவிப்போம். சட்டமன்ற தலைமையை விட தொண்டர்களின் மனநிலை தான் முக்கியம். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தால் போதும். நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கான சுமுகமான சூழல் ஏற்படும் என்றார்.

மேலும், ஊழலற்ற ஆட்சியை ஓ.பன்னீர்செல்வத்தால் மட்டுமே தர முடியும். பேச்சுவார்த்தை நடந்தால் நல்லதே நடக்கும் என்று எதிர்ப்பார்ப்பதாக செம்மலை கூறினார்.

மேலும் படிக்க