• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தி எதிர்ப்பு தீ பரவிட மாநிலம் முழுவதும் கருத்தரங்கம் நடத்தப்படும் – திமுக

April 28, 2017 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்பு தீ பரவிட மாநிலம் முழுவதும், மாவட்டந்தோறும் கருத்தரங்கம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் இன்று நடைபெற்ற தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைமையில் அனைத்து கட்சி சார்பில் நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி.

மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர நடத்தப்படும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பான தீர்மானத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும்.

மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியை எதிர்த்து இந்தி எதிர்ப்பு தீ பரவிட மாநிலம் முழுவதும், மாவட்டந்தோறும் கருத்தரங்கம் நடத்துவது. தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு, டாஸ்மாக் ஊழியருக்கு மாற்று வேலை தர வேண்டும்.

தமிழகத்தில் விவசாய பிரச்னையை தீர்க்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது.

தமிழகத்தில் தற்போது மிக முக்கிய பிரச்னையான குடிநீர் பிரச்னையை போக்க அரசு போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். வைர விழா காணும் திமுக தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தல் ஆகிய தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்க