• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயிலில் இனி பெட்ஷீட்டுக்கு முன்பதிவு ஐ.ஆர்.சி.டி.சி., அறிவிப்பு

April 24, 2017 தண்டோரா குழு

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது.

இந்தியாவில் எல்லாம் டிஜிட்டல் மயமாகி வருவதால் ரயில்வே நிர்வாகமும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து செய்து வருகிறது. அதன்படி ஏசி வகுப்பு அல்லாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் சொகுசாக பயணிக்கும் வகையில் பெட்ஷீட், கம்பளி தலையணை போன்றவற்றை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

ரயில்வேயின் www.irctc.co.in எனும் இணையதளத்தில், பயணிகள் முன்பதிவு செய்யும் போதே உணவுப்பொருளும் முன்பதிவு செய்துகொள்ளலாம். இது மட்டுமின்றி ஏசி அல்லாத பிறவகுப்பில் பயணிப்பவர்கள் ரூ.650யை செலுத்தி பெட்- ரோல் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதைபோல், ரூ.450ஐ செலுத்தி பெட்ஷீட், தலையணை, மெத்தை விரிப்பு போன்றவற்றையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க