• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பியானோவில் புதையல் ! 913 தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு

April 24, 2017 தண்டோரா குழு

இங்கிலாந்தில் பியானோ(இசை கருவி) ஒன்றில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த 913 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு இந்தியா ரூபாய் படி 4 கோடி ஆகும்.

2௦16-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்திலுள்ள ஸ்ரோப்சியர் என்னும் இடத்தில் வசிக்கும் ஹெம்மிங் என்பவர் பியானோ ஒன்றை வாங்கியுள்ளார். அதை பழுதுபார்க்கும்போது அதில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.உடனே அவர் லண்டன் அருங்காட்சியக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்த அவர்கள் உடனே அவருடைய இல்லத்திற்கு வந்து, அந்த தங்க நாணயங்களை சோதனை செய்தனர்.

மகாராணி விக்டோரியா, 7-வது எட்வர்ட் மற்றும் 5வது ஜார்ஜ் ஆகியோர் 1847 முதல் 1915-ம் ஆண்டு வரை இங்கிலாந்து நாட்டை ஆட்சி செய்த காலத்தை சேர்ந்த தங்க நாணயங்கள் என்று அந்த சோதனையின் முடிவில் தெரிய வந்தது.அந்த பியானோவில் மொத்தம் 913 நாணயங்கள் இருந்தன என்று அதிகாரிகள் உறுதி செய்தனர். அந்த நாணயங்களின் மொத்த மதிப்பு 5௦௦௦௦௦ பவுண்ட், அதாவது இந்திய செலவாணி படி சுமார் 4 கோடி ஆகும்.

மேலும் படிக்க