• Download mobile app
08 May 2025, ThursdayEdition - 3375
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நான் யாருக்கும் நோட்டீஸ் அனுப்பவில்லை–கே.ஜே.யேசுதாஸ்

April 17, 2017 தண்டோரா குழு

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் சார்பில் நடந்த அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக பிரபல பின்னணி பாடகர் கே.ஜே யேசுதாஸ் கோவைக்கு வந்தார்.

பின்னர் செய்தியாளர்ககளை சந்தித்து பேசினார். அப்போது, தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற விருதுகளை பெற்றால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவேனோ அதைப்போலவே இந்த விருதை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடவுள் அருளால் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும் என்றார்.

அப்போது, இளையராஜா தனது பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என எஸ்.பி.பாலசுப்ரமணியதுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு, நான் யாருக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை நோட்டீஸ் அனுப்பியவரை போல் கேளுங்கள் என்று வேகமாக எழுந்து சென்றார்.

மேலும் படிக்க