• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெ.,சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் டி.ஆர்.அந்தி அர்ஜுனா காலமானார்

March 28, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தி.மு.க., கட்சி சார்பில் அஜாரான இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.அந்தி அர்ஜுனா உடல் நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை(மார்ச் 28) காலமானார்.

1933-ம் ஆண்டு பிறந்த இவர் மும்பை நகரில் தனது சட்டப் படிப்பை முடித்தார். தனது 38 வயதில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். 1993-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் அட்வோகேட் ஜெனரல் ஆக பணியாற்றினார். அதன் பிறகு, 1996-ம் ஆண்டு முதல் 1998-ம் வரை இந்தியாவின் சொலிசிட்டராக பணியாற்றினார்.

பெரிய அரசியலமைப்பு வழக்குகளில் ஒன்றான கேசவனந்தா பாரதி வழக்கில் எச்.எம். சீர்வையுடன் ஆஜாரானார். அதேபோல் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தி.மு.க. கட்சி சார்பில் ஆஜாரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை நடைப்பெற்றது. பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள் அதில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க