• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பம்பர் பரிசு அறிவித்தது பிசிசிஐ

March 28, 2017 தண்டோரா குழு

சொந்த மண்ணில் நடந்த கடைசி நான்கு டெஸ்ட் தொடர்களை வென்றால் பிசிசிஐ இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ.50 லட்சம் சிறப்பு பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2- 1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதையடுத்து சொந்த மண்ணில் நடந்த கடைசி நான்கு டெஸ்ட் தொடர்களை வென்றதால் பிசிசிஐ இந்திய அணி வீரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

அதன்படி, இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசுத்தொகையும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கு ரூ.25 லட்சமும், இந்திய அணியின் உதவியாளர்களுக்கு தலா ரூ.15 லட்சமும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க