• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவாசாயிகள் தற்கொலையை தடுக்க என்ன செய்தீர்கள் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

March 27, 2017 தண்டோரா குழு

விவசாயிகள் தற்கொலையைத் தடுப்பதற்காக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவில் அளவில் விவசாயிகளின் பிரச்சனை முக்கியமான பிரச்சனையாக இருந்து வருகிறது.தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில்,விவசாயிகள் தற்கொலை தொடர்பான வழக்கு ஒன்றை இன்று விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்தது என்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி அறிக்கையை நான்கு வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு வாரகாலமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு வடமாநில விவசாயிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க