• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆதாரை கட்டாயமாக்க கூடாது – உச்ச நீதிமன்றம்

March 27, 2017 தண்டோரா குழு

அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் அடையாள எண்ணை கட்டாயமாக்க கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் ஆதார் தொடர்பான வழக்கு விசாரணை இன்று(மார்ச் 27) நடைபெற்றது. அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதி அமர்வு,“அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது. அதே சமயம் வங்கி கணக்கு துவங்குவது உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்பதை தடை செய்ய முடியாது. ஆதார் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றை விசாரிக்க 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு தேவை ஆனால் அது தற்போது சாத்தியமில்லை” என்றனர்.

பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய,மாநில அரசுகள் கூறிவரும் நிலையில் உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க