• Download mobile app
15 Jan 2026, ThursdayEdition - 3627
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மின்னணுப் பரிவர்த்தனை- கூகுளுடன் இணைந்தது மத்திய அரசு

March 24, 2017 தண்டோரா குழு

பாதுகாப்பான முறையில் மின்னணுப் பரிவர்த்தனையை மேற்கொள்ள கூகுள் நிறுவனத்துடன் மத்திய அரசு,இணைந்துள்ளது.

பாதுகாப்பான மின்னணுப் பணப்பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக, மத்திய அரசும் கூகுள் நிறுவனமும் கைகோர்த்துள்ளன. கூகுள் நிறுவனத்தின் தென்கிழக்காசிய பிரிவு துணைத் தலை‌‌‌வர் ராஜன் ஆனந்தனும் மத்திய தக‌வல் தொழில் நுட்ப அமைச்சகச் செயலாளர் சுந்தரராஜனும் இதற்கான ஒப்பந்தத்தில் டெல்லியில் கையெழுத்திட்டனர்.

மேலும் மின்னணு பணப்பரிமாற்றம் செய்வதன் அவசியம் குறித்தும் அதை பாதுகாப்பாக எப்படி மேற்கொள்வது குறித்தும் தகவல்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படும் என ராஜன் ஆனந்தன் பேசினார்.

மேலும் படிக்க