• Download mobile app
18 Oct 2025, SaturdayEdition - 3538
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

12 வயதில் தந்தையான சிறுவன் !

March 23, 2017 தண்டோரா குழு

கேரளாவில் 12 வயது சிறுவன் ஒருவன் ஒரு குழந்தைக்கு தந்தையான சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

கேரளா மாநிலத்தின் எர்ணாகுளம் பகுதியில் 12 வயது பள்ளி சிறுவன் ஒரு குழந்தைக்கு தந்தையாகியுள்ளான். இவனே இந்தியாவில் மிக சிறிய வயது தந்தையாகும்.

எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 16 வயது சிறுமி பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டாள். கடந்த சில மாதங்களுக்கு முன் அவளுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அவள் வசிக்கும் பகுதியிலுள்ள 12 வயது சிறுவன் தான் இதற்கு காரணம் என்று அவள் தெரிவித்தாள். அவள் கூறியது கேட்ட அவர்கள் ஆச்சரியமடைந்தனர். நம்ப முடியாத அவர்கள் மருத்துவ ரீதியாக பரிசோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி மருத்துவமனையில் அந்த சிறுவனுக்கும் குழந்தைக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையின் முடிவில், அந்த சிறுவன் தான் அக்குழந்தைக்கு தந்தை என்று உறுதிசெய்யப்பட்டது.

காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின் கீழ், பெற்றோர் மற்றும் குழந்தையின் அடையாளங்களை வெளியிடவில்லை.

இது குறித்து திருவந்தபுரம் மருத்துவ கல்லூரியின் உட்சுரபியல் பிரிவு தலைவர் டாக்டர் பி.கே. ஜப்பார் கூறுகையில், “பருவ வயது அடையும் முன் ஒருவரால் குழந்தை பெற முடியாது. ஆனால் இந்த சிறுவன் மருத்துவ ரீதியாக குழந்தை பெரும் நிலையை அடைந்து விட்டான். இதனை வயதுக்கு மீறிய வளர்ச்சி என்று மருத்துவத்தில் அழைப்பர்.

தந்தையிடமிருந்தும் குழந்தையிடமிருந்தும் சேகரித்த ரத்த மாதிரிகளில் உள்ள டி.என்.ஏ., மரபணுவை மருத்துவ நிபுணர்கள் ஒப்பிட்டு பார்த்தனர். அதன் முடிவில், அந்த சிறுவனே அக்குழந்தையின் தந்தை என்று உறுதியாகிவிட்டது” என்றார்.

கேரள காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின் கீழ் அந்த சிறுவனின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க