• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வர் தொகுதி பிரதமரின் தொகுதியாக மாறும் – தமிழசை

March 23, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகரில் பா.ஜ.க வெற்றி பெற்றால் அந்தத் தொகுதி மோடியின் நேரடிப் பார்வைக்குச் சென்று விடும் என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க, சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார். இவர் பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜனு டன் பேரணியாக சென்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.

பா.ஜ.க வெற்றி பெற்றால்,ஆர்.கே.நகர் தொகுதி பிரதமர் மோடியின் நேரடி பார்வைக்கு சென்றுவிடும். இதன் மூலம் எந்தளவிற்கு பலன்பெறும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முதல்வர் தொகுதியாக இருந்தது பிரதமரின் தொகுதியாக மாறும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க