• Download mobile app
28 Jun 2026, SundayEdition - 3791
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தைக்கு பால் ஏற்பாடு செய்த இந்தியன் ரயில்வே

March 17, 2017 தண்டோரா குழு

“பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து…” என்று ஈஸ்வரனைப் பற்றி மாணிக்கவாசகப் பெருமான் பாடியிருக்கிறார்.

அதைப் போல் ஓடும் ரயிலில் பாலுக்காக அழுத ஐந்து மாத பெண் குழந்தையின் நிலையை அறிந்த கொங்கண் ரயில்வே துறை உடனடியாகப் பாலை வழங்கி, பயணிகளை நெகிழவைத்துவிட்டது. இச்சம்பவம் கடந்த மார்ச் 12 ஆம் தேதி நடந்திருக்கிறது.

எல்லாம் ஒரு டுவிட்டர் தகவலுக்கு மதிப்பளித்ததால் இந்த சேவையைப் புரிந்திருக்கிறது கொங்கண் ரயில்வே.

மும்பையிலிருந்து திருநெல்வேலி செல்லும் ஹப்பா எக்ஸ்பிரஸ் ரயிலில் வாசவி ரோடு ரயில் நிலையத்திலிருந்து தனது ஐந்து மாத கைக்குழந்தையுடன் ரத்தினகிரிக்குப் பயணம் செய்துகொண்டிருந்தார்.

ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது அந்தக் குழந்தை பாலுக்காக அழுதது. உடன் பயணம் செய்த ஒருவர், “குழந்தைக்குப் பால் தேவைப்படுகிறது. தனது பெற்றோருடன் அந்தக் குழந்தை கொங்கண் எக்ஸ்பிரஸ் ரயில்வேயின் ஹப்பா எக்ஸ்பிரஸில் பயணம் செய்துகொண்டிருக்கிறது.

அவர்களுடன் பயணம் செய்துகொண்டிருக்கும் ஸ்நேகா பட் என்பவரைத் தொடர்புகொள்ளவும்” என்று கொங்கண் ரயில்வேத் துறைக்கு ட்விட்டர் மூலம் தகவல் அனுப்பினார்.

அத்துடன் அந்தக் குழந்தையின் படம், பெற்றோர்களின் ரயில் டிக்கெட் ஆகியவற்றையும் படம்பிடித்து ட்விட்டருடன் இணைத்து அனுப்பினார்.

உடனே, அந்தப் பயணியிடமிருந்து அனைத்து தகவல்களை ரயில்வே அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். சரியாக 40 நிமிடம் கழித்து, “பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று அதிகாரிகளஅ பதில் ட்விட் செய்தனர்.

அந்த ரயில் கொலாத் என்ற ரயில் நிலையத்தை அடைந்ததும், அங்கே ரயில்வே பணியாளர்கள் குழந்தைக்குத் தேவையான பாலை வழங்கினர்.

இதை நேரில் கண்ட சக பயணிகள் அனைவரும் கொங்கண் ரயில்வேயின் இந்த விரைவான சேவையை வெகுவாகப் பாராட்டினர்.

சில நேரம் கழித்து, அந்த குழந்தையின் புகைப்படத்தைப் பதிவு செய்த அந்தப் பயணி இந்தியன் ரயில்வேக்கும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கும் தன் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

மேலும் படிக்க