• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்களின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் – அகிலேஷ் யாதவ்

March 11, 2017 தண்டோரா குழு

“உத்தரப் பிரதேச மக்களின் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்று சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

“உத்தரப் பிரதேச மக்களின் தேர்தல் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கு நன்றி.

கடந்த சட்டப் பேரவை தேர்தலில் என் திறமையை நிரூபிக்க 5 ஆண்டுகள் வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. உத்தரப் பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம்.

தேர்தலின் போது ஓட்டுப் பதிவு இயந்திரம் சேதப்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பினால், அது குறித்து ஆளும் அரசு விசாரணை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசு மக்களின் வளர்ச்சிக்கு சமாஜ்வாதி அரசை விட கடுமையாக உழைக்க வேண்டும். மக்களிடம் தவறான தகவல்களை பா.ஜ.க. தந்து வாக்குப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி எங்களுக்கு பலனை அளித்துள்ளது”
இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.

மேலும் படிக்க