• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சத்தீஸ்கரில் நக்ஸ்லைட்டுகள் தாக்குதல் 11 பலி 5 பேர் படுகாயம்

March 11, 2017 தண்டோரா குழு

மத்திய ரிசர்வ் படை போலீஸ் மீது நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 11 வீரர்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

பேச்சி அடர்ந்த காடுகள், சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ளன. அந்த காட்டுப் பகுதி பேச்சி காவல் நிலைய வரம்பிற்குள்ளது. அங்கு சனிக்கிழமை (மார்ச் 11) காலை 9.15 மணியளவில், கொடசேரு கிராமத்தின் சாலையில் மத்திய ரிசர்வ் படை போலீஸ் 219 படை ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பாதுகாப்புப் பணியில் இருந்த அவர்கள் மீது நக்ஸலைட்டுகள் திடீர்த் தாக்குதல் நடத்தினர். அதில் 5 வீரர்கள் படுகாயமடைந்தனர். ரோந்துப் பிரிவில் 112 பாதுகாப்பு படை வீரர்கள் இருந்தனர்.

“சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில், சாலைப் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ் மீது நக்ஸ்லைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 11 வீரர்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

“இறந்த வீரர்கள் வைத்திருந்த 1௦ ஆயுதங்கள் மற்றும் இரண்டு வயர்லஸ் ரேடியோ செட்களைக் கைப்பற்றிச் சென்றுவிட்டனர்” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

“சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரிலிருந்து சுமார் 450 கிலோமீட்டர் தூரத்தில் இஞ்சிராம்-பேச்சி சாலை இணைப்பு நடந்துகொண்டிருந்தது. இடையூறு இல்லாமல் அந்தப் பணி நடைபெற மத்திய ரிசர்வ் படை போலீஸ் சாலை பாதுகாப்புப் பிரிவின் 219 படை பிரிவினர் செய்யப்பட்டு வந்தனர். நக்ஸலைட்டுகள் அவர்கள் மீது கண்மூடித்தனமாகச் சுட்டனர்” என்று மூத்த அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “முதலில் தொடர் குண்டுவெடிப்பில் பாதுகாப்புப் படை வீரர்கள் சிக்கினர். அதைத் தொடர்ந்து அங்கு பதுங்கியிருந்த நக்ஸலைட்டுகள் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். சம்பவ இடத்திற்கு கூடுதல் பாதுகாப்புப் படை விரைந்து, இறந்த வீரர்களில் உடல்களை மீட்டனர்.

காயமடைந்தவர்கள் விமானம் மூலம் பேச்சி நகரில் உள்ள மத்திய ரிசர்வ் படை போலீஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஒரு சிறப்பு அதிரடிப்படைப் பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது” என்றார்.

மேலும் படிக்க