• Download mobile app
15 Jul 2026, WednesdayEdition - 3808
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விபத்தில் சிக்கி காயமடைந்தால் இலவச சிகிச்சை – தில்லி அரசு

March 11, 2017 தண்டோரா குழு

தலைநகர் தில்லியில் விபத்தில் சிக்கி காயமடைபவர்களுக்கு முற்றிலும் இலவசமான சிகிச்சையை பிரதேச அரசு அளிக்கும் என்று தில்லி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார்.

லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் தில்லி அரசு மருத்துவமனையில் புதிய வென்டிலேட்டர் இயந்திரங்களின் செயல்பாடுகளைச் சனிக்கிழமை தொடங்கிவைத்த அவர்,

“தில்லி பிரதேச எல்லைக்குள் யாராவது விபத்தில் சிக்கி, காயமடைந்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலோ அரசு மருத்துவமனையிலோ எங்கு சேர்க்கப்பட்டாலும் அவருக்கு உரிய சிகிச்சைச் செலவு அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும். விபத்தில் சிக்கியவர் பணம் தர வேண்டியதில்லை” என்றார்.

லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனை உள்பட பிரதேச அரசு மருத்துவமனைகளில் புதிதாக125 வென்டிலேட்டர் இயந்திரங்கள் தருவிக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் மூச்சுத் திணறலுக்கு ஆளானால், அவர்களது உயிரைக் காப்பாற்ற இந்த இயந்திரங்கள் பெரிதும் உதவும்.

இதைப் போல் சில தினங்களுக்கு முன் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார் அமைச்சர். அதில் ஏதாவது ஓர் அரசு மருத்துவமனை அனுப்பும் நோயாளிகளுக்கு 21 தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக நோய் கண்டறியும் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.

மேலும் படிக்க