• Download mobile app
02 Jul 2025, WednesdayEdition - 3430
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விபத்தில் சிக்கி காயமடைந்தால் இலவச சிகிச்சை – தில்லி அரசு

March 11, 2017 தண்டோரா குழு

தலைநகர் தில்லியில் விபத்தில் சிக்கி காயமடைபவர்களுக்கு முற்றிலும் இலவசமான சிகிச்சையை பிரதேச அரசு அளிக்கும் என்று தில்லி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார்.

லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் தில்லி அரசு மருத்துவமனையில் புதிய வென்டிலேட்டர் இயந்திரங்களின் செயல்பாடுகளைச் சனிக்கிழமை தொடங்கிவைத்த அவர்,

“தில்லி பிரதேச எல்லைக்குள் யாராவது விபத்தில் சிக்கி, காயமடைந்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலோ அரசு மருத்துவமனையிலோ எங்கு சேர்க்கப்பட்டாலும் அவருக்கு உரிய சிகிச்சைச் செலவு அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும். விபத்தில் சிக்கியவர் பணம் தர வேண்டியதில்லை” என்றார்.

லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனை உள்பட பிரதேச அரசு மருத்துவமனைகளில் புதிதாக125 வென்டிலேட்டர் இயந்திரங்கள் தருவிக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் மூச்சுத் திணறலுக்கு ஆளானால், அவர்களது உயிரைக் காப்பாற்ற இந்த இயந்திரங்கள் பெரிதும் உதவும்.

இதைப் போல் சில தினங்களுக்கு முன் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார் அமைச்சர். அதில் ஏதாவது ஓர் அரசு மருத்துவமனை அனுப்பும் நோயாளிகளுக்கு 21 தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக நோய் கண்டறியும் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.

மேலும் படிக்க