• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பரிசுப்பொருள் வழக்கு-முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுவிப்பு

March 6, 2017 தண்டோரா குழு

பரிசுப்பொருள் தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அப்போதைய அமைச்சர் அழகு திருநாவுக்கரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

ஜெயலலிதா 1992ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது, அவர் தன் பிறந்த நாளைச் சிறப்புடன் கொண்டாடினார். அவருக்குப் பல பரிசுகள், காசோலைகள், வரைவோலைகள் (டி.டி.) பரிசாக வந்தன. அவருக்கு வந்த பரிசு பொருட்களுடைய மதிப்பு மொத்தம் 2 கோடி ரூபாயாகும்.

ஒரு முதல்வருக்கு வரும் பரிசுத் தொகை அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், அவர் அதை அவ்வாறு சேர்க்காமல், தன்னுடைய சொந்த வங்கிக் கணக்கில் சேர்த்துக் கொண்டார். இது தொடர்பாக ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மார்ச் 6ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவும் அப்போது அமைச்சராக இருந்த அழகு திருநாவுக்கரசுவும் இறந்துவிட்டனர். இதனால், அவர்கள் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால், தற்போது அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் மீதான வழக்கு கோடை விடுமுறை காலத்திற்குப் பிறகு விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க